"சிக்கல்களைத் தீர்க்கும் யோகா பயிற்சி" - பிரதமர் மோடி

0 2488

யோகா பயிற்சி நாட்டிற்கும், உலகிற்கும் அமைதியை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மைசூரு அரண்மனை வளாகத்தில் 15 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு யோகா பயிற்சிகளை பிரதமர் மேற்கொண்டார்.

8-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகா மனிதரிடத்திலும், சமூகத்திலும் அமைதியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தனிநபர் மட்டுமின்றி நாட்டிற்கும், உலகத்திற்கும் யோகா அமைதியை தருவதாகக் கூறிய மோடி, மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவும் என்றார்.

மைசூரு அரண்மனை வளாகத்தில் 15 ஆயிரம் பேருடன் இணைந்து பிரதமர் மோடி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.

நாடு முழுவதும் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டங்களில், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments